1579மீது ஓடி வாள் எயிறு மின் இலக
      முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த
      கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை
      எம் பெருமான் தாளை ஏத்தி
போதோடு புனல் தூவும் புண்ணியரே
      விண்ணவரின் பொலிகின்றாரே             (3)