முகப்பு
தொடக்கம்
158
கன்றினை வால் ஓலை கட்டி
கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ
நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய் (8)