158கன்றினை வால் ஓலை கட்டி
      கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
      பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ
      நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராட வேண்டும்
      நாரணா ஓடாதே வாராய்             (8)