1582பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த
      பண்பாளா என்று நின்று
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்
      துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின் வண் சேறை
      எம் பெருமான் அடியார்-தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர்-என் நெஞ்சும்
      கண் இணையும் களிக்கும் ஆறே             (6)