முகப்பு
தொடக்கம்
1584
உண்ணாது வெம் கூற்றம் ஓவாத
பாவங்கள் சேரா-மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்
மென் தளிர்போல் அடியினானை
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ்
தண் சேறை அம்மான்-தன்னை
கண் ஆரக் கண்டு உருகி கை ஆரத்
தொழுவாரைக் கருதுங்காலே (8)