1586பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து
      வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்
      தண் சேறை அம்மான்-தன்னை
வா மான் தேர்ப் பரகாலன் கலிகன்றி
      ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்-நும்
      துணைக் கையால் தொழுது நின்றே             (10)