முகப்பு
தொடக்கம்
159
பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதி அளைந்த பொன்-மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே
மஞ்சனம் ஆட நீ வாராய் (9)