159பூணித் தொழுவினிற் புக்குப்
      புழுதி அளைந்த பொன்-மேனி
காணப் பெரிதும் உகப்பன்
      ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்
      நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே
      மஞ்சனம் ஆட நீ வாராய்             (9)