1608 | திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே உலகு உண்ட ஒருவா திரு மார்பா ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (1) |
|