1609பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி
      பாவை பூ-மகள்-தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்
      மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்திரியா
      சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்-
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே            (2)