1611 | பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர் மன்னர்-தாம் பணிந்து ஏத்தும் வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் நரனே நாரணனே திருநறையூர் நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும் அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (4) |
|