1612 | விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய் பரியோன் மார்வு-அகம் பற்றிப் பிளந்து பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்-தனக்கு அறிந்தேன் அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (5) |
|