1615 | நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக் கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்து குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி அடியேனைப் பணி ஆண்டுகொள்-எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (8) |
|