1616கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி
      கூறை சோறு இவை தா என்று குமைத்து
போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன்
      புனிதா புள் கொடியாய் நெடுமாலே
தீ வாய் நாகணையில் துயில்வானே
      திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய்
      -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே            (9)