1617அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த
      அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி
      ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை
      தூய மாலை இவை-பத்தும் வல்லார்
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு
      மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே             (10)