1618 | செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்- எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (1) |
|