1619முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண
      முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம்
      பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்-
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம்
      -அவை முரல செங் கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (2)