1620குலத் தலைய மத வேழம் பொய்கை புக்கு
      கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன
      நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்-
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு
      வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே             (3)