1621 | சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திரு உருவம் பன்றி ஆகி இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்- புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (4) |
|