1627பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய் பாரைப்
      படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும்
      அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
      கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன்
      கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார்
      ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர்-தாமே            (10)