1638 | பெரும் புறக் கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண் இல் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவைக் கரும்பினை கனியை-சென்று நாடி -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (1) |
|