1640எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
      வாச வார் குழலாள் மலை-மங்கை-தன்
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான்-தன்னை
      பான்மையை பனி மா மதியம் தவழ்
மங்குலை சுடரை வட மா மலை
      உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை பகலை-சென்று நாடி
      -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே             (3)