1641பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையை
      தெள்ளியார் வணங்கப்படும் தேவனை
மாயனை மதிள் கோவல் இடைகழி
      மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை
      எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியை-சென்று நாடி-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே             (4)