முகப்பு
தொடக்கம்
1643
துப்பனை துரங்கம் படச் சீறிய
தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை திருமங்கை மணாளனை
தேவனை திகழும் பவளத்து ஒளி
ஒப்பனை உலகு ஏழினை ஊழியை
ஆழி ஏந்திய கையனை அந்தணர்
கற்பினை-கழுநீர் மலரும் வயல்
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (6)