| 1646 | பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர்-தங்கள் கண்ணினை-கண்கள் ஆரளவும் நின்று- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (9) |
|