1653பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன்
      என்கின்றாளால்
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன்
      என்கின்றாளால்
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால்
      என்கின்றாளால்-
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ? (6)