1654செவ் அரத்த உடை ஆடை-அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு
      என்கின்றாளால்
அவ் அரத்த அடி-இணையும் அம் கைகளும் பங்கயமே
      என்கின்றாளால்
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ? மழை முகிலோ?
      என்கின்றாளால்-
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ? (7)