1656 | வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும் என்கின்றாளால் உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே பயில்கின்றாளால்- கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (9) |
|