முகப்பு
தொடக்கம்
1688
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய
தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப்
பெறும் அளவு இருந்தேனை
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்
அவை சுட அதனோடும்
மந்தமாருதம் வன முலை தடவந்து
வலிசெய்வது ஒழியாதே (1)