1689மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்
      வரை புரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்
      தாழ்ந்தது ஓர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது
      ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன
      செய்வது ஒன்று அறியேனே (2)