1694கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர்
      கோனது வரை ஆகம்
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம்
      அடிகளும் வாரானால்
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும்
      விடை மணி அடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையும் ஆய் இனி
      விளைவது ஒன்று அறியேனே            (7)