முகப்பு
தொடக்கம்
1694
கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர்
கோனது வரை ஆகம்
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம்
அடிகளும் வாரானால்
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும்
விடை மணி அடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையும் ஆய் இனி
விளைவது ஒன்று அறியேனே (7)