1748கவள மா கதத்த கரி உய்ய-பொய்கைக்
      கராம் கொளக் கலங்கி உள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை
      துணிபட-சுடு படை துரந்தோன்-
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர்
      கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (2)