1751மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்
      மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
      பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
      அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து
      அலை புனல் இலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே             (5)