1754அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை
      அஞ்சிடாதே இட அதற்கு
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
      பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
      வரையின் மா மணியும் மரகதத் திரளும்
      வயிரமும் வெதிர் உதிர் முத்தும்
திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்
      திருக்கண்ணங்குடியுள் நின்றானே            (8)