1765எண் திசையும் எறி நீர்க் கடலும்
      ஏழ் உலகும் உடனே விழுங்கி
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்
      மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
      கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்
      கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்
அண்டத்து அமரர் பணிய நின்றார்-
      அச்சோ ஒருவர் அழகியவா             (9)