1788தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த
      தண் மதியின் இள வாடை இன்னே
ஊதை திரிதந்து உழறி உண்ண
      ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதைமையால் இருந்து
      பேசிலும் பேசுக பெய்வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்வன்
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (2)