1789காலையும் மாலை ஒத்துண்டு கங்குல்
      நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும்
      பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம்
      மற்றும் உள அவை வந்திடாமுன்
கோல மயில் பயிலும் புறவின்
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (3)