1794கேவலம் அன்று கடலின் ஓசை
      கேள்மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என்
ஆவி அளவும் அணைந்து நிற்கும்
      அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு
      ஏ வலம் காட்டி இவன் ஒருவன்
      இப்படியே புகுந்து எய்திடாமுன்
      கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (8)