1795சோத்து என நின்று தொழ இரங்கான்
      தொல் நலம் கொண்டு எனக்கு இன்றுதாறும்
போர்ப்பது ஓர் பொன்-படம் தந்து போனான்
      போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்று அவன்-தன்
      மொய் அகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர்-கோன் விரும்பும்
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (9)