1796செற்றவன் தென் இலங்கை மலங்க
      தேவர் பிரான் திரு மா மகளைப்
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
      பேர்-அருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன்
      கண் அகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற
      குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (10)