181ஆனிரை மேய்க்க நீ போதி
      அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்
      கரிய திருமேனி வாட
பானையிற் பாலைப் பருகிப்
      பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே
      செண்பகப் பூச் சூட்ட வாராய்             (1)