முகப்பு
தொடக்கம்
181
ஆனிரை மேய்க்க நீ போதி
அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்
கரிய திருமேனி வாட
பானையிற் பாலைப் பருகிப்
பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே
செண்பகப் பூச் சூட்ட வாராய் (1)