1817முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார்
      கலவியை விடு தடுமாறல்
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
      ஆய எம் அடிகள்-தம் கோயில்-
சந்தொடு மணியும் அணி மயில் தழையும்
      தழுவி வந்து அருவிகள் நிரந்து
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே (1)