1819 | பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி அணி வளர் குறள் ஆய் அகல்-இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில்- கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடைத் துரந்த மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (3) |
|