1819பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த
      பெரு நிலம் அருளின் முன் அருளி
அணி வளர் குறள் ஆய் அகல்-இடம் முழுதும்
      அளந்த எம் அடிகள்-தம் கோயில்-
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில்
      குறவர்-தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே             (3)