182கரு உடை மேகங்கள் கண்டால்
      உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு ஏழும்
      உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா
      திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற
      மல்லிகைப் பூச் சூட்ட வாராய்             (2)