1820 | சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலைத் துரந்து நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்- கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன் வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (4) |
|