1820சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து
      சுடு சரம் அடு சிலைத் துரந்து
நீர்மை இலாத தாடகை மாள
      நினைந்தவர் மனம் கொண்ட கோயில்-
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில்
      கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே            (4)