1821 | வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்து அவன்-தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில்- பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெருந் தேன் மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (5) |
|