1822விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று
      விளங்கனிக்கு இளங் கன்று விசிறி
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த
      கூத்த எம் அடிகள்-தம் கோயில்-
தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிற
      தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே            (6)