முகப்பு
தொடக்கம்
1823
தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர்
செழுந் திரள் பனங்கனி உதிர
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர்
எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
வானகச் சோலை மரகதச் சாயல்
மா மணிக் கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (7)