1824புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ
      பொரு கடல் அரவணைத் துயின்று
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த
      பனி முகில் வண்ணர்-தம் கோயில்-
கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின்
      கவுள் வழி களி வண்டு பருக
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே             (8)