1825புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள்
      ஒத்தன பேசவும் உவந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
      எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
      சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
      தாழ்வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை-
      வணங்குதும் வா மட நெஞ்சே            (9)