முகப்பு
தொடக்கம்
1825
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள்
ஒத்தன பேசவும் உவந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
தாழ்வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (9)