184தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
      மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர்
      மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி
      பொலிந்த முகிற்-கன்று போலே
உருவம் அழகிய நம்பீ
      உகந்து இவை சூட்ட நீ வாராய்             (4)