முகப்பு
தொடக்கம்
184
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர்
மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி
பொலிந்த முகிற்-கன்று போலே
உருவம் அழகிய நம்பீ
உகந்து இவை சூட்ட நீ வாராய் (4)