1857இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை
      இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்
பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன்
      பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்?
குரக்கு-நாயகர்காள் இளங்கோவே
      கோல வல் வில் இராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள்
      அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ            (1)